தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!!

0
31

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!!

பிரபல நடிகை ஒருவர் நேற்று(ஆகஸ்ட்31) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் திரையுலகில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த அபர்ணா நாயர் அவர்களுக்கு சஞ்சித் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 33 வயதான நடிகை அபர்ணா நாயர் தனியார் தொலைக்காட்சி மூலமாக பிரபலமடைந்தவர்.

நடிகை அபர்ணா நாயர் அவர்கள் மகதீர்த்தம், அச்சையன்ஸ், கடலு பரஞ்ச கத, முத்துக்கவ் உள்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் நடிகை அபர்ணா நாயர் அவர்கள் சந்தனமழ, ஆத்மசகி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமடைந்தவர்.

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த நடிகை அபர்ணா நாயர் அவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று(ஆகஸ்ட்31) இரவு 7.30.மணியளவில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்த பொழுது வீட்டில் இவருடயை அம்மாவும் தங்கையும் இருந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நடிகை அபர்ணா நாயர் அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடிகை அபர்ணா நாயர் அவர்களின் தற்கொலை குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்டதை சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நடிகை அபர்ணா நாயர் அவர்களின் மறைவிற்கு மலையாள சினிமா நட்சத்திரங்களும், சின்னத் திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மலையாள சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.