சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர்!

0
88

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர்!

நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் டி.இமான் இசை அமைத்திருக்கிறார். படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியான படங்கள் அனைத்தும் நேரடியாக ஒ.டி.டி தளத்தில் வெளியாகின.

இதனால், நீண்ட இடைவெளிக்கு பிறகு, சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் காரணமாக, ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில், அதனை தொடர்ந்து படத்தின் டிரைலர் கடந்த 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில், சூர்யா அடுத்து நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சூர்யாவின் அடுத்த படத்தை, ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் இயக்கிய ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடமும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. “விரைவில் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது”.

author avatar
Parthipan K