ஓடும் பள்ளி பேருந்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!.. கதறும் பெற்றோர்!..

Photo of author

By Murugan

ஓடும் பள்ளி பேருந்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!.. கதறும் பெற்றோர்!..

Murugan

child

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்காகவே போக்சோ சட்டமும் கொண்டு வரப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே இந்த சட்டத்தின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனாலும், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் குறைந்தபாடில்ல்லை. அதிலும் கடந்த சில மாதங்களாக இது தொடர்பான செய்திகளை அதிகம் பார்க்க முடிகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் பாலூரில் அதிர்ச்சி கொடுக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. பாலூர் கிராமத்தில் பல குடும்பங்கள் வசிக்கிறது. இந்த பகுதியில் ஒரு தனியார் ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல ஒரு பேருந்தும் செயல்பட்டு வருகிறது. அந்த கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இந்த வேனையே பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில்தான், அந்த வேனில் சென்ற 5 வயது சிறுமிக்கு அந்த வேனில் கிளீனராக பணிபுரியும் முருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. புகாரின் பெயரில் முருகன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிறுமியை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி பாலூர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள சிறுமிகளை தேர்ந்தெடுக்கும் காமுகன்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். கிளீனர் முருகன் மீதும் போக்சோ சட்டம் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.