மெரினாவில் இலவச வைஃபை! மாநகராட்சியின் அடுத்தடுத்த தீர்மானம்!!

0
95

மெரினாவில் இலவச வைஃபை! மாநகராட்சியின் அடுத்தடுத்த தீர்மானம்!!

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகளின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் முதலாவதாக சென்னை மெரினா கடற்கரையில் இலவச வை-பை வசதி காண தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இலவச வைஃபை வசதிக்காக மாநகராட்சி தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட உள்ளது. இதற்கு அடுத்தபடியாக வள்ளுவர் கோட்டம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதனால் நுங்கம்பாக்கம் மயிலாப்பூர் கிண்டி தியாக ராயநகரில் தனியார் பட்ட நிலங்கள் உள்ளது அதனை நிலம் எடுப்பு நடவடிக்கை மூலம் அரசு நிலமாக மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடுங்கையூர் குப்பை கிடங்கு சீரமைக்க ரூபாய் 648 கோடியில் பயோ மைனிங் என்ற நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்த போவதாக தீர்மானம் நிறைவேற்றினார். தற்பொழுது மாநகராட்சியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அதில் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அனுமதி வழங்கி உள்ளனர்.