நண்பனின் தாயாருக்கு நடந்த தவறுக்காக ஐந்து வருடம் காத்திருந்து சிறப்பாக செய்த நண்பர்கள்!

0
67
Friends who did better after waiting five years for a mistake that happened to a friend’s mother!
Friends who did better after waiting five years for a mistake that happened to a friend’s mother!

நண்பனின் தாயாருக்கு நடந்த தவறுக்காக ஐந்து வருடம் காத்திருந்து சிறப்பாக செய்த நண்பர்கள்!

ஒரு மனிதருக்கு நண்பர்கள் என்பவர்கள் எப்போதும் உறுதுணையாக இருக்கும் தூண்கள். அதுவும் சில நண்பர்கள் தன்னுடைய நண்பனுக்காக எந்த விஷயம் செய்யவும் தயங்க மாட்டார்கள்.

எப்போதுமே பல உறவுகளை விட ஆண்களுக்கு நண்பர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். அந்த அதிர்ஷ்டம் எல்லாருக்கும் அமையுமா என்றல் இல்லை என்று தான் கூற வேண்டும். சில பேருக்கு மட்டுமே கடவுள் அந்த வரத்தை கொடுத்துள்ளார். பெண்களின் நட்புகள் எல்லாம் எப்போதும் படிக்கும் காலத்தோடு போய்விடும். ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லாமல், தொடர்ந்து வாழ்க்கையினூடே பயணிக்கும்.

அப்படி ஒரு சம்பவம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போது அதை பற்றி தான் பார்க்க போகிறோம். என்னவென்று பாப்போம் வாருங்கள்.

நெல்லை அருகே உள்ள கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் என்ற நபர் ஆவார். இவரது 32 வயதான ஒரு மகன் மாரியப்பன் மீது இரு கொலை மற்றும் சில வழிப்பறி மற்றும் சில கொள்ளை வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இவர் அப்பகுதியில் கொஞ்சம் பெரிய ரௌடியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று அங்கே காட்டுப் பகுதி ஒன்றில் மாரியப்பன் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாரியப்பனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து போலீஸார் தீவிரமான விசாரணை நடத்தி வந்த நிலையில், கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், வெங்கட சுப்பிரமணியன் உள்ளிட்ட நான்கு பேர் சந்தேகத்தின் நேரில் பிடிபட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தினர். அதன் பின் போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரித்ததை அடுத்து அவர்கள் தங்களின் தவறை ஒப்புக்கொண்டனர். அவர்களுடன் பிரகாஷ் என்ற 21 வயது இளைஞரின் நண்பர்கள் ஏழு பேர் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.

மேலும் பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், இந்தப் பகுதியில் கொஞ்சம் பிரபலமான ரௌடியாக வலம் வந்த மாரியப்பன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு எங்களது நண்பனான பிரகாஷின் தாயாரிடம்  தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தான். ஆனால் அப்போது 15 வயது சிறுவனாக இருந்த பிரகாஷால் எதுவுமே செய்ய முடியவில்லை.

ஆனாலும், பிரகாஷின் தாயிடம் மாரியப்பன் நடந்து கொண்ட விதம் எங்களை மிகவும் வேதனை அடைய செய்தது. அதன் காரணமாக அந்த  மாரியப்பனைப் போட்டுத்தள்ள வெகு நாட்களாக திட்ட மிட்டுக் காத்திருந்தோம். அப்போது அவர் குடித்துவிட்டு அந்த காட்டுப் பகுதி வழியாக பைக்கில் வரும் போது ஏழு பேர் சேர்ந்து அவரை வழிமறித்து வெட்டிச் சாய்த்தோம் எனவும்  தெரிவித்துள்ளனர்.

சிறு பிள்ளைகள் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அவர்களின் மனதில் எப்படி எல்லாம் நஞ்சு கலந்து விட்டது பாருங்கள். அந்த நபர் தவறானவர் என்றாலும், நண்பனின் தாய்க்காக ஐந்து வருடங்கள் ஆகியும் தங்கள் மனதை பாதித்த சம்பவத்திற்காக இப்படி ஒரு செயல் செய்தது அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.