தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?

0
79
Full curfew in Tamil Nadu? What is the outcome of the consultation meeting?
Full curfew in Tamil Nadu? What is the outcome of the consultation meeting?

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை அதன் ஆதிக்கம் குறையவில்லை.முதல் அலை,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிக அளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அந்த வகையில் மூன்றாவது அலை தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற பல முன்னேற்பாடுகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நமது தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அதிகாரம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் சேலம் எழில்கொஞ்சும் சுற்றுலா தலமான ஏற்காடு செல்வதற்கு கட்டாயம் ஆர்டி பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் சனி மற்றும் ஞாயிறுகளில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்லவும் தடை விதித்துள்ளனர்.இந்த இடங்களிலெல்லாம் மக்கள் அதிகமாக கூடுவதால் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இவ்வாறு ஆணை பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கோயம்புத்தூர் மால்கள்,பூங்காக்கள் போன்றவை செயல்படவும் மற்றும் திருப்பூரிலும் கட்டுப்பாடுகளை அமல் படுத்தி உள்ளனர்.சென்ற முறை ஆலோசனை கூட்டம் நடந்தபோது கூடுதலான கட்டுப்பாடுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.அந்த ஊரடங்கு ஆனது வரும் 9ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.தற்போது மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமின்றி திரையரங்குகள் திறப்பதற்காக திரை உரிமையாளர் சங்கத்தினர் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.அது பற்றியும் ஆலோசனை நடக்க இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டால் சுழற்சி முறையில் மாணவர்கள் வருகை புரிந்து அவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும் என கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார் என்றும் கூறியிருந்தார்.அந்தவகையில் இன்று தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் முன்பைப் போல் ஊரடங்கு போடப்பட்டால் மக்களின் வாழ்வாதாரம் அதிக அளவு பாதிக்கப்படும்.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.