பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! காரணம் இதுதான்!

Photo of author

By Hasini

பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! காரணம் இதுதான்!

Hasini

Girl abducted and sexually abused! This is the reason!

பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! காரணம் இதுதான்!

கர்நாடகாவின் பெங்களூர் நகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ராமமூர்த்தி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இதில் போலீசாருக்கு கிடைத்த வீடியோவின் அடிப்படையிலும், முதற்கட்ட விசாரணையிலும் 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோன்று, பாதிக்கப்பட்ட பெண்ணை தேடுவதற்காக அண்டை மாநிலத்திற்கு போலீசார் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்க போலீசார் முடிவு செய்துள்ளனர் என பெங்களூர் நகர காவல் ஆணையாளர் கமல்பன்ட் கூறியுள்ளார்.

இதுவரை கிடைத்த தகவலின்படி, 6 பேரும் வங்காளதேசத்தில் இருந்த ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்.

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அந்த பெண்ணை அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தி வந்து, கொடுமைப்படுத்தி, அடித்து உதைத்து உள்ளனர்.  மூத்த அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் முழு அளவில் விசாரணை நடத்தப்படுகிறது என்று கமல் கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் அண்டை மாநிலத்திற்க்கு சென்ற போலீஸ் குழு வந்தால் மட்டுமே முழு விவரங்களும் தெரியும் என்றும் கூறியுள்ளனர்.