கட்டுப்பாடு அற்று பாலியல் உறவு செய்த ஆடுகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

0
193

கட்டுப்பாடு அற்று பாலியல் உறவு செய்த ஆடுகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தெற்கு அயர்லாந்து நாட்டில் உள்ள ஒரு பகுதியில் நூற்றுக்கணக்கான ஆடுகள் திடீரென கட்டுப்பாடற்ற பாலியல் உறவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள் இந்த ஆடுகளின் கட்டுப்பாடற்ற பாலியல் செயலில் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர் இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பல நாட்களாக கட்டுப்பாடின்றி பாலியல் வெறி பிடித்த இந்த ஆடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் ஆடுகள் கொடுத்த தண்ணீரில் வயாகரா கழிவுகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த ஒரு மருந்து கம்பெனி 750 டன்னுக்கும் மேலாக வடிகட்ட படாத வயாக்ரா கழிவுகளை ஆற்றில் கலந்துள்ளதாகவும், அந்த ஆற்றின் நீரை இந்த ஆடுகள் குடித்ததால்தான் கட்டுப்பாடற்ற பாலியல் உறவில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

மேலும் இந்த பாதிப்பில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப பல வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனையடுத்து வயாகரா கழிவுகளை கலந்த அந்த மருந்து கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Previous articleகடலூர் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்?
Next articleவிண்ணில் பாய்ந்தது PSLV C-48 ராக்கெட்