மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!

0
103

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!

மாற்றுத்திறனுடையோர் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிக்கை வெளியிட்டது தமிழக அரசு.

இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை ரூபாய் 500 லிருந்து ஆயிரம் ஆக உயர்த்தி 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும் வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேர் அவர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் ரூ.1,000 த்திலிருந்து ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறன் உடையோர் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் ரூ.1000 த்திலிருந்து ரூ.1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது. இதனை உயர்த்தி வழங்க ரூ.66 கோடி நிதி வழங்கி உள்ளது தமிழக அரசு.

இந்த ஊதிய உயர்வு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.263 கோடி 56 லட்சம் செலவாகும்.

இதன்படி தற்போது தமிழகத்தில் அரசு உதவித்தொகை பெற்று வரும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம், இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனுடையோர் , உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை ரூ 1000 லிருந்து ரூ.1500 ரூபாயாக உயர்த்தி வழங்கவும், இது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 2023 பயனாளர்களுக்கு வழங்கப்படுவதற்கு ரூ 65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.