மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்! 

0
182
#image_title

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்! 

தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வழக்கமாக தமிழகத்தில் ஜுன் மாதம் முதல் தேதி பள்ளிகள் திறப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜூன் மாதம் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில் வருகின்ற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணோலி காட்சி மூலம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம்  ஆலோசனை நடத்தினார்.

அப்போது வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசித்தார். அப்போது பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் வெப்பம் இன்னும் குறையவில்லை என்றும், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம்  வலியுறுத்தியுள்ளனர்.

இது பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர்,

சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் பள்ளி திறப்பு தேதி விவரங்கள் குறித்து கேட்டறிந்த போது இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி அன்று திறக்கப்படும்  என்று அறிவிக்கப்படுகிறது.

மேலும் பள்ளியில் பேருந்துகளை ஆய்வு செய்யும் பணிகள்  போக்குவரத்து துறையினரால்   மேற்கொள்ளப்படும். இணை ஆணையர் அளவிலான அதிகாரி நியமிக்கப்பட்டு கல்வித்துறையின் அதிகாரிகள் தலைமையில் இப்பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டந்தோறும் தனியார் பள்ளி பஸ்கள்  முறையான சோதனைக்கு உட்படுத்தப்படும்.  மேலும் பள்ளியில் கோடைக்கால சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.