சம்பளம் தர அரசிடம் பணம் இல்லை!! இழுத்து மூடும் அரசு பள்ளிகள்!!

Photo of author

By Vinoth

சம்பளம் தர அரசிடம் பணம் இல்லை!! இழுத்து மூடும் அரசு பள்ளிகள்!!

Vinoth

Government has no money to pay salaries!! Government schools are closing down!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில்; இந்த மாநிலத்தில் மொத்தம் 275 மனித வள மேம்பாட்டு தேசிய ஆணையம் பள்ளிகள் மற்றும் 541 ஆரம்ப பள்ளிகள்,  2,200 பெண்கள் சமூக பள்ளிகள் இயங்குகின்றனர்.

மேலும் இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியார்களுக்கு கடந்த 8 மாதம் சம்பளம் தரவில்லை. இந்த பணியில் இருப்பவருக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.36 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் கொடுப்பது ரூ.21 ஆயிரம் மட்டும் அதுவும் சரியாக கொடுப்பது இல்லை. மேலும் இதற்க்கு காரணம் அரசிடம் இருந்து சரியாக நிதி வராததால் அவர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதில் ஆசிரியர்கள் கூறுகையில் பல பள்ளிகளுக்கு சொந்தமான கட்டிடம் இல்லை.

வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறது. தேவையான நிதி, அரசிடமிருந்து பள்ளி நிர்வாகத்திற்கு வராததால், வாடகை செலுத்த இயலவில்லை. முறையான ஊதியம் இல்லாததால் பல பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியம் அளிக்காவிட்டால் மேலும் பள்ளிகள் மூடப்படம் அபாயம் ஏற்படும். இதனால் மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிப்புக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.