தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையில் காலியாக இருக்கின்ற செவிலியர்,மருந்தாளுநர் உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.இந்த பணி குறித்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
பதவிகள்:
1)செவிலியர்
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் மருத்துவமனை மற்றும் சுகாதாரமேலாண்மை படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2)இடைநிலை சுகாதார பணியாளர்
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் மகப்பேறு மருத்துவத்தில் டிப்ளமோ படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணிக்கு ஐந்து காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
3)துணை செவிலியர்
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் தமிழ்நாடு கவுன்சிலின் பதிவு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.14,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
4)மருந்தாளுநர்
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் டி.பார்ம் முடித்திருக்க வேண்டும்.பி.பார்ம் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
5)RMNCH Counsellor
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் மருத்துவமனை மற்றும் சுகாதாரமேலாண்மை படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
6)Occupational Therapist
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.23,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.