நமது இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.18 வயதை கடந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலை வகை: மத்திய அரசு வேலை
நிறுவனம்: இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்(RRB)
பணி: உதவி லோகோ பைலட்
காலிப்பணியிடம்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 01-07-2025
மாத ஊதியம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 30 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஜூலை 01 ஆம் தேதி இறுதி நாள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து (http://rrbchennai.gov.in/) என்ற ஆன்லைன் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற ஜூலை 01 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.