50,000 பேருக்கு அரசு வேலை!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சிகர தகவல்!!!

0
32
#image_title

50,000 பேருக்கு அரசு வேலை!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சிகர தகவல்!!!

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப்பணி வழங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வான 10,205 தேர்வர்களுக்கு பணி நியமனம் வழங்கும்போது முதல்வர் கூறியதாவது,அரசு வேலையின் மதிப்பு எப்போதும் குறையாது எனவும் கூறினார்.

அரசு பணியாளர்கள் எப்போதும் தங்கள் பணியினை கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டும்.அரசு எந்திரம் நன்றாக இயங்கவேண்டுமென்றால் அரசு ஊழியர்களும் நன்றாக இயங்க வேண்டும்.அப்போதுதான் அரசு சிறப்பாக இயங்க இயலும் எனவும் கூறினார்.

தாய்மொழி வழியில் படித்த தேர்வர்களுக்கு அரசு வேளைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும், டி.என்.பி.எஸ்.சி விடைத்தாள்களை திருத்த நவீன இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளதாக கூறினார்.தமிழக பணியாளர் தேர்வாணையம் பணியாளர்களை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுப்பதாகவும் கூறினார்.

 

author avatar
CineDesk