ஒரு பைசா கூட செலவில்லாமல் மூட்டு வலியை நீக்க அருமையான வழி!!

0
138
#image_title

ஒரு பைசா கூட செலவில்லாமல் மூட்டு வலியை நீக்க அருமையான வழி!!

மூட்டு வலி, முழங்கால் வலியால் நிற்கக்கூட முடியாமல் நம்மில் பலர் இன்றளவும் அவதிப்படுகின்றனர். ஒரு பைசா கூட செலவு இல்லாமல் இந்த மூட்டு வலியையும், முழங்கால் வலியையும் நீக்க அருமையான வைத்திய முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம்மில் பலருக்கு மூட்டு வலி இருப்பதால் நிற்கக் கூட முடியாமல் அவதிப்படுவோம். இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த முறையை செய்தால் நிற்க கூட முடியாதவர்கள் நன்றாக ஓடத் தொடங்குவார்கள். தீராத மூட்டு வலி முழங்கால் வலி அனைத்தும் நீங்கும்.

தீராத இந்த மூட்டு வலியை நீக்க இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்து சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மட்டும் தான். ஆம் நம் வீட்டில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை வைத்து எவ்வாறு மூட்டு வலியை சரி செய்வது என்று பார்க்கலாம்.

மூட்டு வலி ஏற்படுவதற்கு காரணம்

மூட்டு வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உடல் பருமன், உடலில் கால்சியம் சத்து குறைவு, சர்க்கரை நோய் போல பல காரணங்களால் மூட்டு வலி ஏற்படும்.

குறிப்பாக மூட்டு வலி ஏற்படுதற்கு என்ன காரணம் என்றால் நம் மூட்டுகளில் உள்ள ஜவ்வும் சைனோயல் ப்ளூயிட் திரவமும் தான் காரணம். அதாவது மூட்டுகளுக்கு பாதுகாப்பாக உள்ள ஜவ்வும், சைனோயல் ப்ளூயிட் திரவமும் குறைவாக சுரக்கும். அந்த சமயத்தில் மூட்டுகள் ஒன்றை ஒன்று உரசும் பொழுது மூட்டு வலி ஏற்படுகின்றது. இதை எளிமையான முறையில் நம் வீட்டில் சாம் வடித்த கஞ்சி தண்ணீரை வைத்து சரி செய்யலாம்.

மூட்டு வலிக்கு சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரை பயன்படுத்தும் முறை.

நம் வீட்டில் சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கஞ்சித் தண்ணீர் இளம் சூடாக இருக்க வேண்டும். சூடு இல்லை என்றால் பயன் கிடையாது. அதனால் இந்த கஞ்சித் தண்ணீரை இளம் சூடாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு இந்த கஞ்சித் தண்ணீரை மூட்டு வலி இருக்கும் பகுதியில் சிறிதளவு ஊற்றி அப்படியே மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு சுமார் 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்வதால் மூட்டுவலி என்பது நமக்கு இருக்காது.

கஞ்சித் தண்ணீரில் டார்ச் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் இது மூட்டுகளை வலுப்படுத்தும். மூட்டுகளை சுற்றியுள்ள ஜவ்வை அதிகப்படுத்துகிறது.

அதுமட்டுமில்லாமல் சைனோயல் ப்ளூயிட் திரவத்தின் உற்பத்தியையும் அதிகரிக்கும். ஒரு வயது, ஒன்றரை வயது ஆன குழந்தைகள் நடக்காமல் இருந்தால் அவர்களுக்கும் சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரை குழந்தைகளின் மூட்டுகளில் தேய்த்து மசாஜ் செய்தால் மூட்டுகள் விரைவாக கூடி குழந்தைகள் நடக்கத் தொடங்குவார்கள்.