ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!

0
185

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!

கடந்த, 2017–18ம் நிதியாண்டுக்கான, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இம்மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய வரிகள் வாரியம் அறிவித்துள்ளது

ஜி.எஸ்.டி., என்னும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் இருந்தாலும், இந்த ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் – 9’ உள்ளது. ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், வரவு – செலவு உள்ள அனைத்து வணிகர்களும் இந்த படிவத்தை தாக்கல் செய்யலாம். அதேபோல் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு – செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் – 9ஏ’ மற்றும் ‘9சி’ தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த நிலையில் கடந்த, 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான, படிவம் – 9 தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30ம் தேதி நிறைவடைய இருந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இது குறித்து, மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் குறிபிடப்பட்டுள்ளதாவது: கடந்த, 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான, ‘ஜி.எஸ்.டி., ஆர்9 மற்றும் 9சி’ படிவம் தாக்கல் செய்வதற்கான அவகாசம், டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், 2018 – 19ம் நிதி ஆண்டுக்கான, 9 மற்றும் 9சி’ படிவம், 2020, மார்ச், 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த படிவத்தின் பல்வேறு பிரிவுகளை எளிமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. இதற்காக, உள்ளீட்டு வரி சலுகை உட்பட பல்வேறு அம்சங்களை, தனித் தனியாக தாக்கல் செய்யாமல், தற்போது ஒருங்கிணைந்து, ஒரே படிவமாக தாக்கல் செய்யலாம். வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களை கவனத்தில் வைத்து, படிவம் – 9 எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Previous articleRTI வளையத்துக்குள் வந்தது உச்சநீதிமன்றம்! மர்மமான வழக்குகளை பற்றி தகவல் வெளி கொண்டுவரப்படுமா?
Next articleநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: சபரிமலைக்கு செல்ல குவியும் பெண்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here