ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த இடத்திற்கு செல்ல தடை நீக்கம் செய்ய உத்தரவு!

Photo of author

By Parthipan K

ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த இடத்திற்கு செல்ல தடை நீக்கம் செய்ய உத்தரவு!

Parthipan K

Happy news for Ayyappa devotees! Order to remove the ban!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த இடத்திற்கு செல்ல தடை நீக்கம் செய்ய உத்தரவு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.மேலும் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்க்ளின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கார்த்திகை மாதம் வந்தாலே பக்தர்கள் அனைவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு மாலை அணிந்து செல்வது வழக்கம்.அதனால் நடப்பாண்டில் கார்த்திகை மாதம் முதலில் இருந்தே ஏராளமான பக்தர்கள்மாலை அணிந்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணாமாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது.அதனால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் ஐயப்பன் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கும் ,குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனால் சுற்றுலா பயணிகள் தூரத்தில் இருந்தே செல்பி எடுத்து சென்றனர்.இந்நிலையில் தற்போது குற்றாலம் மெயின் அருவி,பழைய குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில் குளிக்க அனுமதிக்கப்படுவதாகவும் இரண்டு நாட்களுக்கு பிறகு தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் உற்சாகத்தில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.