தமிழகத்தில் இன்று 8க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

0
246

இன்று முதல் வரும் 4ம் தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleதமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை:! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
Next articleபோலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here