இதோ வந்துவிட்டது போலி மருந்துகளுக்கு  புதிய தொழில்நுட்பம்!! மத்திய அரசு அதிரடி!!

0
32
Here comes the new technology for fake drugs!! Central government action!!
Here comes the new technology for fake drugs!! Central government action!!

இதோ வந்துவிட்டது போலி மருந்துகளுக்கு  புதிய தொழில்நுட்பம்!! மத்திய அரசு அதிரடி!!

இந்தியா சுமார் 12 5 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ளது. மேலும் உலக பார்வையில் மிகப்பெரிய வர்த்தக சந்தையாகும். மேலும் இந்தியா மிகப்பெரிய வர்த்தகத்தில் ஒன்று மருந்துகள்.  அதனை தொடர்ந்து இந்தியாவில் போலியான மருந்துகள் அதிக அளவில் பயன்பட்டியில் உள்ளது.

இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் உணவிற்கு பதிலாக அதிக மாத்திரை உண்ணுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் சில மாத்திரைகள் போலியானது எனவும் பல மருந்துகள் தரமற்று இருப்பதாகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்து.

மேலும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பல நிறுவனங்களின் மருந்துகளை ஆய்வு நடத்தியது. அதனையடுத்து ஆய்வு முடிவுகளில் பல மருந்துகள்  மற்றும்  மாத்திரைகள் தரமற்றவைகள் எனவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற போலி மருந்துகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் மருந்து பொருட்களின் விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் நாட்டில் கடந்த ஆண்டு போலி மருந்துகளின் விற்பனையும் அதிகரித்து உள்ளது.

அதனையடுத்து காய்ச்சல், இருப்புச்சத்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு மற்றும் மாரடைப்பு போன்றவைகளின் போலி மருந்துகள் சந்தைகளில் விற்கபடுகிறது. இதனை தடுக்க மத்திய அரசு தற்போது புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் விற்பனை செய்யப்படும் 300 மருந்துகள் லேபில்கள் மீது கீயு ஆர் கோடு மூலம் பிரின்ட் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் அந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும் போது மருந்து உற்பத்தி, தொகுதி என், விவரம் னைத்தும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். முதல் கட்டமாக இதய நோய், வழி நிவாரணி, நீரிழிவு நோய போன்ற மருந்துகளில் புதிய வசதி கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
Jeevitha