பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை!!

0
87

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை

 

மதுரை வட இந்தியர் சார்பாக அதன் தலைவர் ஹூக்கம் சிங்என்பவர், வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ள நிலையில் உள்ள விலங்குகளை பொது இடங்களில் ஆடு மாடு போன்ற விலங்குகளை பலியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

 

அதில் அவர் கூறியதாவது இறைச்சி கடைகளிலும் பொது இடங்களிலும் அதிகமான விலங்குகள் கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமாக கொல்லப்படுகிறது. ஒரே வரைமுறை இல்லாமல் விலங்குகள் வதை செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோரின் முன்னிலையில் விசாரணை நடந்தது.

அப்போது மனுதாரரின் தரப்பில் ஆடு மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் கொல்லப்படுவது குறித்து அவர் வாதிட்ட பொழுது,பொது இடங்களில் விலங்குகளை பலி இடுவது தவறானது என மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது ஆகவும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மக்கள் அவர்களது வீட்டில் எளிய முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என்பதும் அவருடைய வாதத்தில் வாதிடப்பட்டது.

கொரோனா காரணமாக பக்ரீத் அவர்கள் வீட்டிலேயே எளிமையாக செய்து கொள்ளலாம் எனவே பொது இடங்களில் மத விழாக்களை நடத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக வாதிடப்பட்டது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதைப்பற்றி கோப்புகளை தயாரிப்பதற்காக அவகாசம் வேண்டும் என்று அறிவித்திருந்தார்,  ஆனால்பஆனால்  நெருங்கிவிட்டது .

குறைவான நாட்களே உள்ளதால் ஆலோசித்த நீதிபதிகள் பொது இடங்களில் விலங்குகளை பலியிடுவதற்கான தடை  விதித்து மத்திய அரசின் ஆணையை ஏற்று அதன் பின் உயர்நீதிமன்றம் விலங்குகளை பலியிட தடை விதித்துள்ளது.

இதைப்பற்றி நீதிபதிகள் கூறியதாவது பொது இடங்களில் விலங்குகளை பலி இட மத்திய அரசு தடை விதித்துள்ளது தொடர்ந்து உயர்நீதிமன்றமும் இந்த விதியை ஆமோதிக்கிறது .அதனால் பொது இடங்களில் யாரும் பலியை இட வேண்டாம் என தமிழக காவலர்களுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.