தமிழகத்தில் தற்பொழுது டாஸ்மாக் ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.டாஸ்மாக்கில் கிட்டத்தட்ட 1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.இது குறித்த புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை சம்மந்தப்பட்டவர்கள் மீது FIR பதிவு செய்தது.
இதையடுத்து அமலாக்கத்துறை டாஸ்மாக் ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் வீடுகள்,அலுவலகங்கள் மற்றும் சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டது.விசாரணைக்கு பின்னர் டாஸ்மாக்கில் 1000 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது என்பதை அதிகார்பூர்வமாக அறிவித்தது.
கடந்த மே 16 அன்று ரத்தீஷ்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பர்கள்,திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
டாஸ்மாக் ஊழல் விசாரணை பரபரப்பை கிளப்பியிருக்கும் நிலையில் பிரபல நடிகை கயாடு லோகருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி தற்பொழுது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.
டிராகன் படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கயாடு லோகர்.இவர் தற்பொழுது சிம்பு,ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.டிராகன் வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டில் டாப் இடத்தில் இருக்கும் நடிகை கயாடு லோகர் டாஸ்மாக் ஊழல் வழக்கில் சிக்கியிருப்பவர்கள் நடத்திய இரவு பார்ட்டியில் கலந்து கொள்ள ரூ.35,00,000 வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.இந்நிலையில் குறுகிய காலத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் கயாடு லோகர் டாஸ்மாக் ஊழல் வழக்கில் தொடர்பு படுத்தப்படுத்தப்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.