கள்ள காதலை கண்டித்த கணவன்! மனைவி செய்த கொடூரம்!

0
77
Husband condemns fake love! The atrocity committed by the wife!
Husband condemns fake love! The atrocity committed by the wife!

கள்ள காதலை கண்டித்த கணவன்! மனைவி செய்த கொடூரம்!

மைசூர் மாவட்டத்தில், டி.நரசிப்புரா தாலுகாவில் ஓசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடராஜூ 50 வயதான இவர். மாண்டியா மாவட்டத்தில், ஸ்ரீரங்கம் தாலுகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான உமாவை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆனால்  கணவன்-மனைவியிடையே 22 வயசு வித்தியாசம் இருந்ததால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார் உமா. அப்போது தனது அம்மா வீட்டுக்கு  பக்கத்து வீட்டு வாலிபரான அவினாஷ் என்பவருக்கும் உமாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இது பற்றி உமாவின் கணவனுக்கு தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் உமா, அவினாஷ் உடனான கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் உமாவுடன் வெங்கடராஜு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவனை கொலை செய்ய இரண்டு பெரும் சதி திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெங்கடராஜூவை தனது தாய் வீட்டுக்கு வரவழைத்த உமா. அவருக்கு காபியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார்.

அதை பருகிய உமாவின் கணவன் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். உடனே அவினாஷை அங்கு வரவழைத்து அவருடன் சேர்ந்து உமாவும் கணவனின் முகத்தை தலையணையால் அமுக்கி மூச்சுத் திணறடித்து நிறுத்தியதுடன், கட்டையால் அடித்தும் கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில், யாருக்கும் தெரியாமல், அவரது உடலை தூக்கி வீசிவிட்டு, மறுநாள் தனது கணவரை காணவில்லை என்று பொய்யான நாடகம் ஆடியுள்ளார் உமா.

ஊரெல்லாம் தேடி பின்னர் அவரது உடல் கிணற்றில் உள்ள கிராம மக்களுக்கு தெரிய வந்ததும், வெங்கடராஜு தற்கொலை செய்து கொண்டதாக மேலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனையில் அவருக்கு காப்பியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அவரது உடலில் கட்டையால் தாக்கிய காயங்கள் இருப்பது தெரியவந்தது. அதன் காரணமாக போலீசாருக்கு உமா மீது சந்தேகம் ஏற்பட்டது.

அதனால் தனது காதலனுடன் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். கடந்த 9 மாதங்களாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தகவலை மைசூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.