மனைவிக்கு மாப்பிள்ளை தேவை என விளம்பரம் செய்த கணவன்

0
73
Husband registered wife name for marriage site in tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சி (32) இவருக்கும் வெள்ளியூர் பகுதியை சேர்ந்த ஓம்குமார் (34) என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ஜான்சி ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததும் ஓம் குமாரும் ஜான்சியுடன் அமெரிக்கா சென்று விட்டார். இருவரும் அமெரிக்காவில் குடும்பம் நடத்தி வந்தனர்.

கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஓம்குமார் மனைவியை பிரிந்து சொந்த ஊரான
திருவள்ளூர்க்கு திரும்பி விட்டார். பட்டதாரியான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே பால் வியாபாரமும் செய்து வருகிறார்.

இருவரும் ஏறக்குறைய 3 வருடங்களுக்கு மேல் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் ஓம்குமார் பூந்தமல்லி சப் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு பதிவு செய்திருந்தார். அதன் பிறகு ஓம்குமார் ஜான்சியின் விவரங்களை திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து இருக்கிறார். மேலும் தொடர்பு எண்ணாக ஜான்சியின் தந்தையான பத்மநாபன் எண்ணை கொடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஜான்சியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து பலரும் பத்மநாபனை தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பத்மநாபன் போலீசில் புகாரளித்துள்ளார்.

இது குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் விவாகரத்து கிடைக்காத விரக்தியில் இவ்வாறு செய்த ஓம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

author avatar
Parthipan K