Home National திருமணம் முடிந்த பிறகு மனைவியை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவன்! 

திருமணம் முடிந்த பிறகு மனைவியை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவன்! 

0
திருமணம் முடிந்த பிறகு மனைவியை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவன்! 
Husband shocked to learn about wife after marriage!

திருமணம் முடிந்த பிறகு மனைவியை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவன்!

ஒரு ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்தால் தான் வாழ்க்கை சிறக்கும். ஆனால் இதில் எது மாறி இருந்தாலும் வாழ்க்கை இன்பமாக இருக்காது. இது நாம் அனைவரும் நன்கு அறிந்த விஷயம் தான் என்றாலும், ஒரு மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் ஒருவர் பெண் என்று கூறி ஒரு ஆணை திருமணம் செய்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில், கான்பூர் மாவட்டத்தில், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஒருவர், அதே மாவட்டத்தி;ல் பான்கி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் வழக்கம் போல சாதரணமாக எல்லோரும் செய்யும் திருமணம் போலவே இருந்துள்ளது. அனைத்து சடங்குகளும் முறைப்படி நடந்தேறி உள்ளது.

அதன்பின், திருமணமத்திற்கு பிறகு கணவன் மனைவியுடன் சேர்ந்து இருக்க ஆசையாக, பல முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் மனைவியோ தனக்கு உடல் நிலை சரியில்லை என ஒவ்வொரு முறையும் அவரின் கணவர் முயற்சி செய்யும் போது, ஒவ்வொரு காரணம் புதிது புதிதாக  சொல்லியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவரை அணுகி இருவரும் உடல் நிலை குறித்து பரிசோதனை செய்துள்ளனர். இதன் அடிப்படையில் தான், அதாவது, அந்த பெண் ஒரு திருநங்கை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் இதை கணவரிடம் கூறிய போது அவருக்கு தூக்கிவாரி போட்டது.

பின்னர் கணவர் தன் மனைவி மீதும், மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர். மணமகன் வீட்டில், இவர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளனர். அதன் போலீசார் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 420 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விஷயம் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.