ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்துவோம்! பயன்படுத்திக் கொண்டே இருப்போம்! முதல்வர் ஆவேசம்!

0
72

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லும் வழக்கம் அதிகமாகி வருகிறது. ஒன்றிய அரசு என முதலமைச்சர், பல அமைச்சர்கள் மற்றும் பலர் அனைவரும் சொல்ல நாம் கேட்டிருப்போம். ஒன்றிய அரசு என்பது தவறான சொல் அல்ல என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தி மு க ஸ்டாலின் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்.

சட்டமன்றப் பேரவையில் அவர் பேசியது, ஒன்றிய அரசு என்று சொல்வதை ஏதோ சமூக குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்படுகிறதோ அதுதான் நாங்கள் சொல்கிறோம் என்று அவர் கூறினார்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி இந்தியா அதாவது பாரதம், மாநிலங்களைக் கொண்ட ஒரு ஒன்றிய இருக்கும் என்றுதான் உள்ளது. யூனியன் ஆஃப் ஸ்டேட் என்று தான் இருக்கிறது. அதேதான் பயன்படுத்துகிறோமே தவிர சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஒன்றியம் என்பது தவறான சொல் இல்லை. “மாநிலங்கள் ஒன்று சேர்ந்து” என்பதுதான் அதனுடைய பொருள். இன்னும் சிலர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லாததையும், எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லாத வார்த்தைகளையும் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 1957ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இந்திய யூனியன் என்றுதான் அடையாளப் படுத்தப் பட்டிருக்கிறது. 1963 ஜனவரி 25 நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசுகின்ற பொழுது அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது. பொதுமக்களிடம் நிலைத்துள்ளது, என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது கூட்டாட்சி ஒன்றியத்திற்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே அதாவது மாநிலங்களாகப் பிரித்து தரப்பட்டுள்ளது என்று பேசியிருக்கிறார்.

சமஷ்டி என்ற வார்த்தையை மரியாதைக்குரிய மாபொசி அவர்கள் பயன்படுத்துகிறார்கள். வெளியேறுக பகுதியான அதிகாரக் குவிப்பு, வருக உண்மையான கூட்டாட்சி என்று மூதறிஞர் ராஜாஜி அவர்களே எழுதி இருக்கிறார்கள். ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரள தேவையில்லை ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கி இருக்கிறது அதற்காக தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம் பயன்படுத்துவோம் பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என்று சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் அவர்கள் ஆவேசமாக பேசியுள்ளார்.

author avatar
Kowsalya