ஹைதராபாத் இளம் பெண் கொலை வழக்கில் துப்பு துலங்கியது

0
64

ஹைதராபாத் இளம் பெண் கொலை வழக்கில் துப்பு துலங்கியது

26 இளம் மருத்துவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஐதராபாத் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
26 வயது இளம்பெண் பிரியங்கா ரெட்டி இவர் வெட்னரி படித்துவிட்டு ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தினமும் சம்சா பாத் என்றும் இடத்தில் இருந்து கச்சி பௌலி பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு அவர் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பிய அவர் சம்சா பாத் டோல் கேட்டில் வண்டியை நிறுத்திவிட்டு கச்சி பௌலி பகுதிக்கு கார் மூலம் சென்றுள்ளார் பிறகு அன்றைய தினத்தில் இரவு 7 மணி அளவில் கச்சிபௌலி மீண்டும் டோல்கேட் பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது அவருடைய இரு சக்கர வாகனம் பழுதடைந்து உள்ளது அதாவது பின் டயர் பஞ்சர் ஆகி விட்டதாக அங்கே இருந்த லாரி ஓட்டுனர் தெரிவித்துள்ளார் பின்னர் அவரே சரி செய்து தருவதாகவும் வலுக்கட்டாயமாக உதவி செய்ய முன்வந்துள்ளார்.

பிரியங்கா எவ்வளவோ எடுத்துரைத்தும் நான் பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்தும் கூட உதவி செய்ய முன்வந்துள்ளார். இதன் பேரில் சந்தேகம் அடைந்த பிரியங்கா உடனடியாக தான் வைத்திருந்த செல்போன் மூலமாக தனது சகோதரி ரம்யாவுக்கு தெரிவித்துள்ளார் பின்னர் அழுது புலம்பியுள்ளார் எனக்கு பயமாக உள்ளது விரைந்து வந்து தன்னை காப்பாற்று என கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர் சகோதரியும் அவரது உறவினர்களும் டோல்கேட் பகுதிக்கு விரைந்து வந்து பார்த்தபோது அங்கு காணவில்லை.
செல்போனில் தொடர்பு கொண்டபோதும் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் பதறிப்போன சகோதரி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர் இதற்கிடையே பிரியங்காவை ரொம்ப நேரம் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் காலை 7 மணியளவில் அதே பகுதியில் சப்வே அருகே பிரியங்கா ரெட்டி சடலமாக மீட்டனர் பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது வெளிவந்துள்ள ரிப்போர்ட்டில் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் தீ வைத்து எரித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திட்டமிட்டு கொலை செய்துள்ளனரா ! அல்லது வேறு ஏதும் காரணமா எனவும் விசாரித்து வருகின்றனர்.

இப்படி ஒரு கேவலமான செயலை செய்து உள்ளது ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
CineDesk