நான் சிவகார்த்திகேயனுக்கு சாபம் விடுகிறேன்! இயக்குநர் மிஷ்கின் அவர்கள் பேட்டி!!

0
37

நான் சிவகார்த்திகேயனுக்கு சாபம் விடுகிறேன்! இயக்குநர் மிஷ்கின் அவர்கள் பேட்டி!!

 

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நான் சாபம் விடுகிறேன் என்று இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் யோகி பாபு, நடிகை சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

சாந்தி டால்கிஸ் நிறுவனம் மாவீரன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. பரத் சங்கர் மாவீரன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

மாவீரன் திரைப்படம் இந்த மாதம் அதாவது ஜூலை 14ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு மத்தியில் மாவீரன் படக்குழு படத்தின் புரொமோசன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ள இயக்குநர் மிஷ்கின் அவர்கள் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு சாபம் விடுவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

இயக்குநர் மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி “ரொம்ப டீசன்டான மனிதர் நடிகர் சிவகார்த்திகையன் ஆவார். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு சண்டைக் காட்சி முடிந்த பின்னர் உடனே சண்டைக் காட்சிகளில் ஈடுபட்ட அனைவரிடமும் வந்து மன்னிப்பு கேட்பார். இத்தகைய குணம் உள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் 40, 50 ஆண்டுகள் சினிமாவில் இருக்க வேண்டும் என்று நான் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு சாபம் விடுகிறேன்” என்று இயக்குநர் மிஷ்கின் கூறியூள்ளார்.

 

இயக்குநர் மிஷ்கின் மாவீரன் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திலும் முக்கியமான கதாபப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.