நடிகனாக இங்கு வரவில்லை இந்தியனாக வந்துள்ளேன்!! பிரபல நடிகர் சுதீப் பேட்டி!!

0
202
I didn't come here as an actor, I came here as an Indian!! Interview with famous actor Sudeep!!
I didn't come here as an actor, I came here as an Indian!! Interview with famous actor Sudeep!!
நடிகனாக இங்கு வரவில்லை இந்தியனாக வந்துள்ளேன்!! பிரபல நடிகர் சுதீப் பேட்டி!!
பிரபல நடிகர் கிச்சா சுதீப் அவர்கள், கர்நாடகத் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து நடிகனாக வரவில்லை இந்தியனாக வந்துள்ளேன் என்று பேட்டி அளித்துள்ளார்.
பலத்த பாதுகாப்பு ஏற்படுகளுடன் இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகின்றது. இன்னும் சிறிது நேரத்தில் வாக்குப் பதிவுகள் முடிவடையவுள்ளது. இதுவரை அமைதியாக வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பல அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் வாக்கு அளித்து வரும் நிலையில் 100 வயது முதியவர், திருமணம் முடிந்த மணப்பெண், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் வாக்கு செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் வாக்களித்து முடித்தவுடன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
வாக்களித்து முடித்துவிட்டு வெளியே வந்த நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து, “அனைவரும் அவரவர் பிரச்சனைகளை மனதில் நினைத்து பார்த்துவிட்டு வாக்களிக்க வேண்டும். நான் நடிகராக இங்கு வரவில்லை. ஒரு இந்தியனாக இங்கு வந்துள்ளேன். வாக்களிப்பது எனது கடமை” என்று அவர் கூறினார்.