என் வாழ்க்கையின் சோகமான நாட்களில் இந்த படத்தைதான் பார்ப்பேன்!!! நடிகை சமந்தா ருத் பிரபு பதிவு!!!

0
36
#image_title

என் வாழ்க்கையின் சோகமான நாட்களில் இந்த படத்தைதான் பார்ப்பேன்!!! நடிகை சமந்தா ருத் பிரபு பதிவு!!!

பிரபல நடிகை சமந்தா அவர்கள் சோகமான நாட்களில் பார்க்கும் திரைப்படம் பற்றி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய தேதிகளில் நடித்த நடிகை சமந்தா இந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இதற்கு மத்தியில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் நடிகை சமந்தா பரபரப்பான தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்ட பொழுதும் யசோதா திரைப்படத்தில் நடித்து முடித்து சிகிச்சையில் இருக்கும் பொழுது டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. தெரிந்து நடிகை சமந்தா சாகுந்தலம் என்ற திரைப்படத்திலும் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு செல்லவிருப்பதாகவும் ஒரு ஆண்டு சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாகவும் நடிகை சமந்தா கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் நடிகை சமந்தா அவர்கள் “நான் குழந்தையாக இருந்த நாட்களில் என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான நேரத்திலும் சோகமான நேரத்திலும் நான் சவுண்ட் ஆஃப் மியூசிக் என்ற திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். இந்த உண்மையான உலகத்தில் இருந்து அந்த திரைப்படம் என்னை மாய உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.

நான் பெரியவளாக வளரும் வரை சவுண்ட் ஆஃப் மியூசிக் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். சில திரைப்படங்கள் ரொம்ப காலம் கழிந்து பார்க்கும் பொழுது புதுமையான ஒன்றாக இருக்கும். ஆனால் சவுண்ட் ஆஃப் மியூசிக் திரைப்படத்தை எப்பொழுது பார்த்தாலும் என்னை அந்த திரைப்படம் குழந்தை பருவத்திற்கு அழைத்து செல்லும். இங்கு வந்து நேரடியாக இந்த இடங்களை பார்க்கும் பொழுது இன்னும் இளமையாக இருக்கின்றது” என்று பதிவிட்டுள்ளார்.