BJP: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணிற்கு பாஜக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வருகை புரிய உள்ளார். நாளை நடைபெற போகும் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் மதுரைக்கு வருவதற்கு முன் முக்கிய மூன்று வேலைகளை முடித்துவிட்டு தான் டெல்லிக்கு திரும்ப வேண்டும் என்ற உத்தரவை மூடி போட்டு உள்ளாராம்.
அதில் முதலாவதாக அதிமுக என் தங்களுடன் கூட்டணி வைத்தால் டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைக்க கூடாது என்று கூறியுள்ளனர். நாளடைவில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் முக்கிய நிர்வாகிகள் கொண்டு இது ரீதியாக டெல்லி மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். நாங்கள் என் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளனர்.
இதனையெல்லாம் வைத்துதான் அமித் ஷா எடப்பாடி யிடம் பேச உள்ளாராம். அதுமட்டுமின்றி பாமக தேமுதிக இருவரும் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளாராம். முதலில் பாமகவின் உட்கட்சி மோதலை சரி கட்ட ஆடிட்டர் ரகுபதியை பாஜக முன்கூட்டியே அனுப்பி வைத்தது.
தற்போது ஓரளவுக்கு பிரச்சனைகள் முடியப்போகிறது என்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில் அமித்ஷா வருகை புரிய உள்ளார். இந்த தலைவர்களை நேரில் சந்தித்து பேசி விட்டான் அனைத்தும் முடிவாகிவிடும் என்று எண்ணியுள்ளார்கள். இதே போல முரண்டு பிடிக்கும் தேமுதிக வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஸ்ட்ரிட் ஆர்டரையும் போட்டுள்ளதால் இதை முடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய மந்திரி உள்ளதாக கூறுகின்றனர்.
ஒரு பக்கம் எடப்பாடி சமாளிப்பு மற்றொரு பக்கம் ஓபிஎஸ் டிடிவி தினகரன் கூட்டணி அதே போல பிளவுபட்டு இருக்கும் பாமக மூரண்டு பிடிக்கும தேமுதிக என அனைத்தையும் சரி செய்யும் முயற்சியில் அமித்ஷா நாளை இறங்க உள்ளார்.