இந்த ஒரு விஷயம் தெரிந்தால்.. இனி குளிப்பதற்கு சோப் யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

Photo of author

By Divya

இந்த ஒரு விஷயம் தெரிந்தால்.. இனி குளிப்பதற்கு சோப் யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

Divya

Bath Without Soap Benefits: நம் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளவும்,வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தவும் குளியல் அவசியமானதாக உள்ளது.சோப் பயன்படுத்தி குளித்தால் உடலில் வெளியேறும் அதிகப்படியான வியர்வை நாற்றம் கட்டுப்படும்.

சோப்பில் செயற்கை வாசனை அதிகமாக பயன்படுத்தப்படுவதால் அவற்றை பயன்படுத்தி குளிக்கும் பொழுது உடல் மணம் வீசுகிறது.இருப்பினும் சோப் கெமிக்கல் பொருள் என்பதை அதை பயன்படுவதை தவிர்க்க வேண்டுமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சோப் இல்லாமல் குளிப்பதன் மூலம் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும்.சிலர் சருமத்திற்கு சோப் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.சோப் பயன்படுத்தாமல் குளிப்பதால் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் பாதுகாக்கப்படுகிறது.சரும அலர்ஜி பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

வறண்ட சருமப் பிரச்சனை இருப்பவர்கள் சோப் இல்லாமல் குளிப்பதால் சருமம் மென்மையாக மாறும்.தோல் அலர்ஜி காரணமாக சிலருக்கு சோப் பயன்படுத்துவது அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.சரும அலர்ஜி ஏற்படாமல் இருக்க சோப் இன்றி குளிக்கலாம்.

சோப் பயன்படுத்தி குளித்தால் சருமத்தில் pH அளவில் பாதிப்பு ஏற்படும்.அதுவே சோப் பயன்படுத்தாமல் குளிப்பதால் pH அளவு மாறாமல் இருக்கும்.இதனால் சுருக்கம்,சரும வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

சோப் பயன்படுத்தாமல் குளிப்பதால் சரும ஆரோக்கியம் வயதான காலத்திலும் நன்றாக இருக்கும்.சோப் பயன்படுத்தாமல் குளித்தால் சருமம் மென்மையாக மாறும்.நீண்ட வருடங்களுக்கு இளமை பொலிவுடன் இருக்க சோப் பயன்படுத்தி குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

சோப் இல்லாமல் இயற்கை பொருளை பொடித்து சருமத்திற்கு அப்ளை செய்து குளிக்கலாம்.ரோஜா பூ,மஞ்சள் தூள்,சந்தனம்,வேப்பிலை,கற்றாழை போன்ற பொருட்களை பொடித்து இயற்கை குளியல் பொடியாக பயன்படுத்தி வந்தால் சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கும்.

சோப் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாதவர்கள் தேங்காய் எண்ணெய்,ஆட்டுப்பால்,தேங்காய் பால்,வேப்பிலை,கற்றாழை,மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் சோப்பை வாங்கி பயன்படுத்தலாம்.கெமிக்கல் சோப்பை காட்டிலும் இதுபோன்ற சோப் சருமத்திற்கு நன்மை தரும்.