PMK: பாமக கட்சியானது இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் இன்று ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தைலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, என்னுடன் இருப்பவர்களுக்கு கட்டாயம் சட்டமன்றத் தேர்தலில் பதவி வழங்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி பாமக மகளிர் மாநாடானது பூம்புகாரில் நடைபெற உள்ள நிலையில் இது ரீதியாக ஆலோசனை மேற்கொள்ள புதிய மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் உள்ளிட்டோரை நியமிக்க உள்ளோம்.
மேற்கொண்டு யாரெல்லாம் புதிய தலைவர்கள் என்பது குறித்து வெளிப்படுத்தவே இந்தக் கூட்டம். அந்த வகையில் என்னுடனே இருக்கும் எம்எல்ஏ அருளுக்கு பாமகவின் இணை பொது செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இமயமலையின் உயரத்தின் அளவிற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் என்றைக்கும் என்னுடன் இருப்பவர். மேலும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப்படும் என்பது குறித்து தற்போது வரை முடிவெடுக்கவில்லை.
அதேபோல என்னுடன் சேர்ந்து செயல்படுபவர்களுக்கு கட்டாயம் தேர்தலில் சீட்டு வழங்கப்படும். பாமகவின் அனைத்து முடிவுகளையும் நான்தான் எடுப்பேன், அதற்கான அதிகாரமும் என்னிடம் தான் உள்ளது. எங்களது தேர்தல் கூட்டணியானது வித்தியாசமான முறையிலும், சிறந்து விளங்கும் வகையிலும் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அப்பா மகனுக்கிடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலால் அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்து மாவட்ட செயலாளர் என பலரை ராமதாஸ் மாற்றி அமைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது வரை 70-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர் 60க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் இதற்கு எதிராக அன்புமணியும் அறிவிப்பை வெளியிட்டு பொது குழு கூட்டத்தை நடத்தி வருகிறார். தற்போது பாமக அருளுக்கு புதிய பதவி வழங்கியதை அடுத்து அன்புமணி ரீதியாக எந்த ஒரு எதிர் அறிவிப்பும் வெளியாகவில்லை.