ADMK DMDK: தமிழகத்தில் உள்ள ஆறு எம்பிக்களின் பதவியானது வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், மாநிலங்களவை தேர்தலானது அம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆறு சீட்டுக்களில் நான்கு திமுகவும் மீதமுள்ள இரண்டு சீட்டுகள் அதிமுக வசம் உள்ளது. திமுக தனது கழக நிர்வாகிகள் மூன்று பேருக்கும் மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு ஒரு சீட்டு என்று ஒதுக்கி உள்ளது.
இரண்டு சீட்டுகளை கையில் வைத்திருக்கும் அதிமுக யாருக்கு வழங்குவது என்று ஆலோசனை செய்து வருகிறது. குறிப்பாக தேமுதிக ஒரு சீட்டு கேட்டு கோரிக்கை வைத்துள்ளது. கடந்து முறை கூட்டணி கட்டியாக இருந்த அன்புமணி, மேலும் ஜி கே வாசனுக்கு எம் பி சீட் கொடுத்தீர்கள். அதேபோல இம்முறையும் கூட்டணி கட்சிக்கென்று ஒரு சீட்டு வழங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி கடந்த முறை பாமகவுக்கு சீட் வழங்கி, அவர்கள் உங்களுக்கு கூட்டணியில் எந்த ஒரு பக்க பலமாகவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் எம்பி சீட் வழங்குவதாக அதிமுக எங்களுக்கு ஒப்புதல் கொடுத்ததாகவும் பிரேமலதா கூறியுள்ளார். ஆனால் அதிமுக தலைமை இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் தனது வாரிசை டெல்லிக்கு அனுப்பி எம்பியாக பார்க்க வேண்டும் என் பிரேமலதா நினைக்கிறார்.
அதேபோல சீட்டு வழங்கினால் மட்டும் தான் கூட்டணி வைப்போம் என்ற முடிவில் பிரேமலதா உள்ளாராம். எடப்பாடி பழனிச்சாமிக்கு எம் பி சீட் குறித்து அதிக நெருக்கடி இருப்பதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இம்முறை எம்பி சீட் கூட்டணி கட்சிக்கு வழங்காமல் மூத்த நிர்வாகிகளுக்கு வழங்குமாறு மற்றொருபக்கம் பரிந்துரை செய்து வருகின்றனர். யாருக்கு இந்த எம்பி சீட் கிடைக்கும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.