மாணவ மாணவிகளுக்கு வெளிவந்துள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேரம் மாற்றம்!!

0
43
Important announcement for students!! Time change in schools in this district tomorrow!!
Important announcement for students!! Time change in schools in this district tomorrow!!

மாணவ மாணவிகளுக்கு வெளிவந்துள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேரம் மாற்றம்!!

முதல்வர் வருகையை ஒட்டி நாளை பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

திமுக தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படியே தற்போது வருகின்ற செப்டம்பர் மாதம் 15 -ஆம் தேதி, அதாவது நாளை திமுக அரசு அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இந்த திட்டமானது அண்ணா பிறந்த நாளான நாளை செப்டம்பர் 15, வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்ணா பிறந்த மாவட்டமான காஞ்சிபுரம் சென்று இந்த திட்டத்தை முதலில் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முதல்வரின் வருகையை ஒட்டி பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைத்து தற்போது கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் நாளை 15.09.2023 அன்று அனைத்து பள்ளிகளும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே செயல்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் வரும்பொழுது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவே பள்ளிகளின் நேரத்தை மாற்றி அமைத்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் இந்த நேரம் மாற்றம் குறித்து தெரிவித்துள்ளனர்.