பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! பிரசாதம் பெற கூடுதல் கவுண்டர்கள்!

0
87
Important information released by Tirupati Devasthanam for devotees! Additional counters to receive offerings!
Important information released by Tirupati Devasthanam for devotees! Additional counters to receive offerings!

பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! பிரசாதம் பெற கூடுதல் கவுண்டர்கள்!

திருப்பதி திருமலைக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த புரட்டாசி மாதம் தொடக்கத்தில் இருந்து தற்போது நடந்த வைகுண்ட ஏகாதசி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றது.இதன்  மூலம் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரத்திற்கு அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கபடுவது வழக்கம் தான்.அந்த பிரசாதத்தை பக்தர்கள் விரைவில் பெற்று செல்லும் விதமாக 50 கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றது.

ஆனால் இந்த 50 கவுண்டர்களிலும் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதனால் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும் பக்தர்களின் வசதிக்கேற்ப மேலும் கூடுதலாக 30 கவுண்டர்கள் அமைக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் பக்தர்கள் கூட்ட நெரிசலில் அவதி படாமல் பிரசாதத்தை பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K