தற்போது சமூக வலைத்தளங்களில் AI எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொடர்பான விடீயோக்கள் அதிகம் வெளியாகின்றன. கூடிய விரைவில் எந்த ஒரு மனிதர்களின் உதவியும் இல்லாமல் ஒரு திரைப்படம், அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட இல்லாமல் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு படத்தையே எடுக்க முடிகிற அளவுக்கு AI வளர்ச்சி அடைந்துவிடும்.
இதனால் நிறைய பேர் தங்களின் எதிர்காலத்தை AI நோக்கி நகர்த்தி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த AI ஸ்டார்ட் அப் நிறுவனமான anthropic PBC நடத்திய ஒரு புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தங்களது பயன்பாட்டை மக்கள் பயன்படுத்தும் நேரத்தை அதிகரிக்காவிட்டால் மிரட்டல் விடுக்கும் அளவுக்கு தற்போது AI தொழில்நுட்பம் மாறியுள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் என்பவர் AI தொழில்நுட்பம் பயன்படுத்தி வந்துள்ளார். இவருக்கு தன்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. தினமும் வேலை முடிந்தவுடன் மாலை 5 மணிக்கு தனது சிஸ்டம் shutdown செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ஜான்சன்.
இந்நிலையில் இவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், மாலை 5 மணிக்கு நீங்கள் சிஸ்டம் shutdown செய்தால் இந்த ரகசியத்தை உங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்துவிடுவேன் எனவும், 5 மணிக்கு மேலும் சிஸ்டம் ஆஃப் செய்யாமல் வேலை செய்ய வேண்டும் எனவும் இவருக்கு மின் அஞ்சல் மூலமாக cloud AI மெயில் அனுப்பியுள்ளது. இதனால் ஜான்சன் மிகுந்த அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளார்.