சேலம் மாவட்டத்தில்  கந்து வட்டி கொடுமையால் தறி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!!

0
67
In Salem district, a loom worker committed suicide by drinking poison due to usury!!
In Salem district, a loom worker committed suicide by drinking poison due to usury!!

சேலம் மாவட்டத்தில்  கந்து வட்டி கொடுமையால் தறி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர்தான் சுரேஷ். இவர் கூலி தறி தொழிலாளி ஆவார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பெயரில் இருந்த நிலத்தை அடமானம் வைத்து சுயதொழில் செய்ய முடிவெடுத்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான துறையன் மற்றும் சேட்டு என்ற நபர்களிடம்  நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஆறு செக் லீப் பாண்டு மற்றும் பத்திரங்களில் கையெழுத்திட்டு அவர்களிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று பணத்துடன் அவர்களிடம் சென்றுள்ளார்.

அங்கு துறையன் மற்றும் சேட்டு அசல் வட்டி என 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமென்று சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மனம் உடைந்த சுரேஷ் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சுரேஷின் உறவினர்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து தாரமங்கலம் போலீசார் விசாரணை செய்து துறையன் மற்றும் சேட்டு மீது கந்து வட்டிக் கொடுமை வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K