பிரபல நடிகரின் வீட்டின் முன் மருத்துவ ஊழியர் செய்த சம்பவம்! காரணம் இதுதானாம்!

0
87
Incident committed by the medical staff in front of the house of the famous actor! This is the reason!
Incident committed by the medical staff in front of the house of the famous actor! This is the reason!

பிரபல நடிகரின் வீட்டின் முன் மருத்துவ ஊழியர் செய்த சம்பவம்! காரணம் இதுதானாம்!

நடிகர் அஜித்குமார் தனது மனைவியான நடிகை ஷாலினியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் போல சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய ஒரு பெண் ஊழியர் ஒருவர் ஆர்வமிகுதியால் தனது செல்போன் மூலம் நடிகர் அஜித் குமாரை வீடியோ எடுத்தார்.

அந்த பெண்ணின் பெயர் பர்சனா வயது 26 என்றும் சொல்லப்பட்டு உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து மருத்துவமனையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களிடம் அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்றும், புகைப்படம் எடுப்பதும் அதை வலைத்தளங்களில் பரப்புவதும் தவறு என்றும் அந்த பெண்ணிற்கு மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள்.

ஆனாலும் நடிகரின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பல வதந்திகள் அதன் காரணமாக ஏற்பட்டது. அதன் எதிரொலியாக மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண் ஊழியரை பணி நீக்கம் செய்தது. இதைக் கேள்விப்பட்ட அஜித் குமாரின் மனைவி மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி பரிந்துரை செய்ததன் காரணமாக பர்சனா மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் சிறிது நாட்களிலேயே மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கும் வந்ததன் காரணமாக அவரால் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை. எனவே நடிகரின் மேலாளரை சந்தித்து தனக்கு மீண்டும் மருத்துவமனையில் வேலை கிடைக்க உதவுமாறு கேட்டுள்ளார். அந்த ஆடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில் நேற்று மாலை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகரின் வீட்டிற்கு வந்த பர்சனா நடிகர் அஜித் வீட்டு வாசலிலேயே தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கிருந்த போலிசார் அவரை தடுத்தனர். பின்னர் அவரது உடலில் தண்ணீரையும் ஊற்றினர். அப்போது எனக்கு நியாயம் கிடைக்கவேண்டும். அவரை சந்திக்காமல் நான் இங்கிருந்து போகமாட்டேன்.

ஒரு வருடமாக என் வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருக்கிறது என்றும் சொன்னார். இதையடுத்து போலீசார் அவரையும் அவருடன் வந்த மற்றொரு பெண்ணையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.