வெளுத்து வாங்கும் மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Photo of author

By CineDesk

வெளுத்து வாங்கும் மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

CineDesk

Updated on:

Rain Alert for 12 Districts in Tamil Nadu

வெளுத்து வாங்கும் மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்று 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்

சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளனர்

மேலும் தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களிலும் திருவள்ளூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களிலும் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருவதையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து விடுமுறை அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவித்து இருந்தது. இதனையடுத்து ஆய்வு மையத்தின் கணிப்பின்படி சரியாக தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மழையில் சிக்காமல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது