ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ளை போர்வை போர்த்தியது போல பொங்கி செல்லும் இரசாயன நுரைகள்!

0
74
Increase in water flow to Hosur Kelavarapalli Dam! Chemical foams raging like wrapped in a white blanket!
Increase in water flow to Hosur Kelavarapalli Dam! Chemical foams raging like wrapped in a white blanket!

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ளை போர்வை போர்த்தியது போல பொங்கி செல்லும் இரசாயன நுரைகள்!

கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக வினாடிக்கு 781 கன அடி நீர் வரத்தாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், தற்போது அணையில் 41.66 அடி நீர் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து மொத்தமுள்ள 7 மதகுகளின் வழியாக வினாடிக்கு 908 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து இரசாயன கழிவு நீர்கள் திறந்துவிடப்பட்டுள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் தென்பெண்ணை ஆற்றில் இரசாயன நுரைகள் அதிக அளவு செல்கிறது. ஆற்று நீரில் இரசாயன நீர் பொங்கி செல்வது வெள்ளை போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது.இரசாயன நுரைகள் அதிக அளவு ஆற்று நீரில் பொங்கி செல்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.