இந்தியாவில் மேலும் அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

0
120

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,615 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளி விவரம் மூலமாக தெரிவித்திருக்கிறது. ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,36,52,944 என அதிகரித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 13,265 பேர் குணமடைந்ததால் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,29,96,427 என்ற அளவில் இருக்கிறது தற்போது 1,31,043 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்த நோய் தொற்று பாதிப்பினால் 20 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,25,474 என அதிகரித்திருக்கிறது. நாட்டில் இதுவரையில் 199 கோடி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,64,038 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.