மேட்டூரில் நேர்ந்த சோகம்? மீன் பிடிக்கச் சென்றவர் பிணமாக மீட்பு!!

0
104
The tragedy in Mettur? The person who went fishing was rescued as a dead body!!
The tragedy in Mettur? The person who went fishing was rescued as a dead body!!

மேட்டூரில் நேர்ந்த சோகம்? மீன் பிடிக்கச் சென்றவர் பிணமாக மீட்பு!!

மேட்டூர் அடுத்த மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய வயது 38. இவர் திருமணமாகாதவர். நேற்று மாலை அருகில் உள்ள காவிரி ஆற்றில் தூண்டிலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். இன்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை.

சிவகுமாரின் உறவினர்கள் அவரை ஆற்றில் தேடிப் பார்த்தனர். அங்கு பார்த்தபோது அவருடைய இரு சக்கர வாகனம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகள்,காலணிகள் இருந்தது. எல்லாம் இருந்தும் சிவகுமாரை காணவில்லை என உறவினர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பெயரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றின் உள்ளே இறங்கி தேடினார்கள். நீண்ட நேரம் ஆகியும் அவரின் சடலம் கிடைக்காததால் ஆழமான இடத்திற்கு சென்று தேடினர். பல மணி  நேரத்திற்குப் பிறகு நீரில் மூழ்கி இருந்த சிவக்குமாரின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார் சிவகுமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நேற்று அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவருக்கு நீச்சல் தெரியும் எனவும் தெரியவந்தது. விசாரணையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டாரா இல்லை நீரில் மூழ்கி தான் உயிரிழந்தாரா என்று மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

author avatar
Parthipan K