இந்தியா இங்கிலாந்து 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி!

0
82

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகின்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 191ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் தாகூர் 52 விராட்கோலி 52 சேர்த்தார்கள் இங்கிலாந்து அணியின் சார்பாக வோக்ஸ் 4 விக்கெட்டுகள் மற்றும் ராபின்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆரம்பித்தது முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 53 ரன்களை சேர்த்தது. மலான் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த சூழ்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்றையதினம் ஆரம்பமானது. மலான் 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ் டோவ் 37 ரன்னும் மொயின் அலி 35 ரன்னும் சேர்த்தார்கள்.

ஒன்லி போப் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து 81 ரன்னில் வெளியேறினார். இறுதியில் கிறிஸ் வோக்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். கடைசியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 290 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் சார்பாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் ஜடேஜா உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். தாக்கூர், சிராஜ் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக விளையாடினார்கள் 2-வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா விக்கெட் இழக்காமல் 43 ரன்கள் சேர்த்து இருந்தது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 22 ரன்னுடனும், களத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ரன்னை விட இன்னும் 56 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.