இந்தியாவில் மேலும் சில ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

0
65

நமது இந்திய நாட்டை பாதுகாக்கும் நமது வீரர்களுக்கு மேலும் சில பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் இவர்களுக்கு தற்போது அதிகமாக கொரோனா வைரஸ் தாக்க தொடங்கி விட்டது.

நமக்காக எல்லையை பாதுகாக்கும் நமது ராணுவ வீரரர்களையும் பாதித்தால் எதிர்காலம் கேள்வி குறிதான். கோரோனா பாதிப்பு அடுத்த வுகானாக மாறும் அளவிற்கு இந்தியா சென்றுகொண்டு இருக்கிறது.

நமது நாட்டில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500-க்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அண்டை நாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எல்லையில் இரவு பகலாக பாடுபடும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது மிகவும் வேதனைக்குரியதாகும்.
இதுவரை சுமார் 250-க்கும் அதிகமான (பி.எஸ்.எப்.) வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
Parthipan K