Breaking News, District News, Politics, State, Tiruchirappalli

“விஜய்க்கு செல்வாக்கு! தவெகவில் இணைகிறாரா காளியம்மாள்” – வெளியான பரபரப்பு தகவல்!

Photo of author

By Anand

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், தற்போது தவெகவில் இணையப்போகிறார் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அது உண்மை அல்ல எனத் தெளிவாக மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

“விஜய் இளைஞர்களை ஈர்க்கக்கூடியவர்!”

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள், “விஜயின் அரசியல் வருகை இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவருக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் தற்போது இணையவில்லை. இணைய விரும்பினால் அதை முறைப்படி, முழு காரணங்களுடன் அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.

“கணிக்க முடியாத அரசியல் சூழல்”

காளியம்மாள் மேலும் கூறுகையில், “இப்போதுள்ள அரசியல் சூழல் மிகக் குழப்பமானது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யார் எப்போது என்ன முடிவெடுப்பார்கள் என்பதை சொல்ல முடியாத நிலைதான் உள்ளது” என்றார்.

தவெகவில் இணைய திட்டம் இல்லை

அண்மையில் சமூக வலைதளங்களில் பரவிய “காளியம்மாள் தவெகவில் சேர்ந்துவிடுவார்” என்ற செய்தியை முற்றிலும் மறுத்த அவர், “அந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

எதிர்கால அரசியல் திட்டம்

“நான் மக்கள் பிரச்சனைகளுக்காக குரலெழுப்ப விரும்புகிறேன். எனது அடுத்த நிலைப்பாடு எது என்றாலும் அது முழுமையாக மக்களுக்கானதாயிருக்கும். கட்சியில் இணையும் நேரம் வந்தால் ஏன் இணைகிறேன் என்பது உட்பட அனைத்து தகவல்களையும் முறைப்படி வெளிப்படுத்துவேன்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

“தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” – கமலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் நேரு! பரபரக்கும் அரசியல்களம் 

பாஜக-காங்கிரஸ் மறைமுக கூட்டணி என்ற பரபரப்பு குற்றச்சாட்டு! ‘இந்தியா’ கூட்டணியை விட்டு வெளியேறியது ஆம்ஆத்மி!