சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

Photo of author

By Parthipan K

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

Parthipan K

Information released by Chennai Meteorological Department! Chance of rain with thunder and lightning!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் வங்க கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. காரணமாக தமிழகம் புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலில் தான் மழையின் தாக்கம் குறைய தொடங்கியது. பிப்ரவரி மாதம் முதலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இருந்து தற்போது வரை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் தமிழகம் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி காரணமாக இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். 2௦ ஆம்  தேதி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி  நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமுத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் மேலும் கடந்த 24-25  மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் தற்போது வறண்ட  வானிலை நிலவி வருகின்றது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் தாக்கம் அதிகரித்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.