தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கம் வெளியிட்ட தகவல்!! விவாசயிகளுக்கு 1,4000 கோடி கடன்!!

Photo of author

By Jeevitha

தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கம் வெளியிட்ட தகவல்!! விவாசயிகளுக்கு 1,4000 கோடி கடன்!!

Jeevitha

Information released by Start Management Cooperative Society!! 1,4000 crore loan to farmers!!

தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கம் வெளியிட்ட தகவல்!! விவசாயிகளுக்கு 1,4000 கோடி கடன்!!

தமிழ்நாட்டில் விவசாயம் குறைந்து கொண்ட வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு பல சலுகைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு பயிர்க் கடன், வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் போன்ற பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும் இது மாதிரி திட்டங்களால் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள்.  இதே போன்று தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் பயிர்க்  கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுக்குறித்து கூட்டுறவு சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பயிர்க் கடன் நிலுவை தொகையை திருப்பி செலுத்த விவசாயிகளுக்கு பதிலாக கூட்டுறவு சங்கமே  7% வட்டியை கட்டிவருகிறது.

மேலும் கடந்த நிதியாண்டு 17.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய்  13,342.30 கோடி பயிர்க் கடனை வழங்கி கூட்டுறவுச் சங்கம் சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிதியாண்டில் , தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கம் ரூபாய் 14000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு புதிய உறுப்பினர்கள் சேர்ந்து 1,37,052 விவசாயிகளுக்கு ரூபாய்  1,102.17 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயிர்க்  கடன் தேவைப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவுச் சங்கம் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.