திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! பக்தர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்!

0
114
Information released by Tirupati Devasthanam! Devotees should take note of this!
Information released by Tirupati Devasthanam! Devotees should take note of this!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! பக்தர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.அப்போது டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகம் படுத்தப்பட்டது.அதன் மூலம் யார் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிட பட்டிருக்கும்.அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை புரிந்தால் கூட்ட நெரிசல் ஏற்படாது என தேவஸ்தானம் அறிவித்தது.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருப்பதி எழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 11 ஆம் தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடந்து வருகின்றது.கோவிலில் வைகுண்ட துவாரத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு திருப்பதியில் ஒன்பது மையங்களில் தேதி நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனம் முடிந்த பிறகு பரமபத வாசல் வழியாக சென்று பக்தர்கள் துவார தரிசனம் மட்டும் நடந்து வருகின்றது.மேலும் துவார தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.அதனையடுத்து நேற்று இலவச தரிசன டோக்கன் திருப்பதி அலிபிரி, பூதேவி வளாகம்,கோவிந்தராஜசாமி, இரண்டாவது சத்திரம் ஆகிய நாக்கு இடங்களில் மட்டுமே டோக்கன் வழங்கப்படுகின்றது.இதனை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K