இதெல்லாம் நம்ம இருக்க நிலைமைக்கு தேவையா? வீண் பிரச்சனையில் மாட்டப்போகும் ரவி மோகன்?

Photo of author

By Anand

இதெல்லாம் நம்ம இருக்க நிலைமைக்கு தேவையா? வீண் பிரச்சனையில் மாட்டப்போகும் ரவி மோகன்?

Anand

ஜெயம் ரவிக்கு கொஞ்ச மாதங்களாகவே நேரம் சரிஇல்ல என்று தான் சொல்லணும். மனைவியுடன் விவாகரத்து பிரச்சனை அதை தொடர்ந்து பாடகி கெனிஷாவுடன் காதல் என தொடர்ந்து எதாவது வதந்தியில் சிக்கிக்கிட்டு தான் இருக்கிறார். அதுமட்டுமல்ல அண்மையில் ஜெயம் ரவி என்று இருந்த தன்னுடைய பெயரை ரவி மோகன் என மாற்றிவிட்டார்.

இவருடைய மனைவி ஆர்த்தி விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்றால் நீங்க எனக்கும், என் பிள்ளைகளுக்கும் மாதாமாதம்40 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் ஜெயம் ரவி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ஜெயம் ரவியும், SJ சூர்யாவும் சேர்ந்து நடிக்க உள்ளனர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கும் ரெண்டாவது படத்தில் யோகி பாபுவை ஹீரோவாக களமிறக்க உள்ளார் ஜெயம் ரவி.

இவரு நடிக்கிற படமே ஓடலைன்னு இவங்க மாமியார் கம்பளைண்ட் பண்ணிக்கிட்டு இருக்கு, இதுல இவரே தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு அதுல நடிச்சா மாமியார் நிலைமை தான் இவருக்கும் வரும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.