விவாகரத்து எல்லாம் நாடகமா? ரசிகர்களை முட்டாளாக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா!

0
99
Is divorce all drama? Fans question Dhanush and Aishwarya!
Is divorce all drama? Fans question Dhanush and Aishwarya!

விவாகரத்து எல்லாம் நாடகமா? ரசிகர்களை முட்டாளாக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை 18 வருடங்களாக வாழ்ந்து முடித்துக் கொண்டனர். மேலும் ஐஸ்வர்யா தன்னுடைய சமூகவலைதளங்களில் தனுஷ் என்ற பெயரை மாற்றி ஐஸ்வர்யா ரஜினி எனவும் வைத்திருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இணைந்து வாழ வாய்ப்பே இல்லை என்று கூறி வந்தனர். இந்நிலையில் தனுஷ் மட்டும் ஐஸ்வர்யாவின் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அந்த பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிவடைந்தது. இருவருமே தங்களுடைய பட வேலைகளில் பிஸியாக இருந்தனர். ஐஸ்வர்யா மீண்டும் படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார். அதேபோல் தனுஷும் நானே வருவேன் ,வாத்தி ,திருச்சிற்றம்பலம், என பல பாடல்களை பாடி வந்தார்.

மேலும் பார்ட்டி ஒன்றில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே பங்கு பெற்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்றதாகவும் கூறினர்.ஆனால் தற்போது இவர்களை பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது.அந்த தகவலில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஆர்யாபுரத்தில் உள்ள  பிளாட் ஒன்றில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இருவரும் பிரிந்த நிலையிலும் அவர்களின் வீட்டின் பெயர் பலகையில் தனுஷ் ஐஸ்வர்யா என்ற பெயர் நீக்கப்படவில்லை. மேலும்  தனுஷ் ஐஸ்வர்யா இருவருமே அந்த வீட்டிற்கு சென்று வருவதாகவும் தங்களுடைய வாழ்க்கை நினைவுகளை மறக்க முடியாமல் அந்த வீட்டிற்கு சென்று வருகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இதன் மூலம் இருவரும் விரைவில் ஒன்று சேர்வார்கள் எனவும் பாலிவுட்  வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. விவாகரத்து முடிந்தது என்றும் அறிவித்து விட்டு தற்போது இருவரும் இணைகிறார்கள் அப்போது ரசிகர்கள் அனைவரும் முட்டாள்களா என ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

author avatar
Parthipan K